Friday, April 19, 2024

அதிரை : வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக மஜக முன்னெடுத்த போராட்டம் – பல்வேறு கட்சியினர் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சமுக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் 5,6,7 ஆகிய தேதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பதாகைகள் ஏந்தி சமுக இணையதள போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 07/06/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் பதாகைகள் ஏந்தி சமுக இணையதள போராட்டம் அக்கட்சியின் மாவட்ட து.செயலாளர் அதிரை சேக் தலைமையிலும், மாவட்ட து.செயலாளர் ஸ்மார்ட் சாகுல் முன்னிலையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தமுமுக நகர தலைவர் அலிம், எஸ்.டி.பி.ஐ நகர செயலாளர் சாகுல் ஹமீது, நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் பசுமை ஜியாவுதீன் மற்றும் சாதலி, சாகுல் ஹமீது ஆகியோரும் அதிரை மஜகவின் நகர பொருளாளர் அஷ்ரப், நகர து.செயலாளர் மர்ஜுக் மற்றும் பலர் கலந்து கொண்டு வெளிநாட்டு தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கமிட்டனர். இறுதியாக நகர செயலாளர் அப்துல் சமது நன்றியுரை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...