அதிரை பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் (அரசு பள்ளி அருகே) அமைந்திருக்கும் டிரான்ஸ்பார்மர் ஒன்று சுமார் ஒருமணி நேரமாக அதிக ஒளியுடன் எறிந்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களை தொடர்புக்கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை மின்வாரிய ஊழியர்கள் ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ளவே இல்லை என கூறப்படுகிறது. இதனிடையே டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட அதிக ஒளியால் அப்பகுதி மிகுந்த வெளிச்சத்துடன் காணப்பட்டது.