Wednesday, April 24, 2024

சின்ன சிங்கப்பூரில் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படும் சஹர் உணவு!!

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு காலம் அதிகாலை நேரத்தில் சஹர் எனப்படும் உணவையும், மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இஃப்தார் எனப்படும் மாலை உணவும் முறையாக உட்கொண்டு வருவது 1400 ஆண்டுகளில் இருந்து நபி பெருமானார் காட்டித்தந்த வழக்கமாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் சின்ன சிங்கப்பூர் என செல்லமாக அழைக்கப்படும் கூத்தாநல்லூரில் நோன்பு வைப்பவர்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக தினமும் சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கூத்தாநல்லூரில் ரமலான் காலம் முழுவதும் பொன்னாச்சி பொதுச் சேவை மையம் சார்பில் ரமலான் நோன்பு கடைபிடிக்க கூடி ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், தனிமையில் வசிப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வீடு தேடிச் சென்று சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சீனாவின் செல்லப்பிள்ளையாய் வலம் வந்த கொரோனா வைரஸ் காலகட்டமான இந்தநிலையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களுக்கு அங்குள்ள செல்வந்தர்களின் உதவியினால் அரிசி, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு சாலையில் சுற்றித் திரிபவர்களுக்கு உண்ண உணவும் உடுத்த உடைகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...