Thursday, April 18, 2024

அதிரை பேரூராட்சிக்காக காத்திருக்காமல் களத்தில் இறங்கிய கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்(படங்கள் இணைப்பு)!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள்,நடைபாதைகள் ஏற்கனவே சரிசெய்யப்படாமல் இருந்திருந்த நிலையில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் பள்ளம்,மேடாகவும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் நடப்பதற்கு வசதியில்லாமல் காணப்படுகிறது.

அதிராம்பட்டிணம் கடற்கரை தெருப்பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மதரஸாவிற்கு அருகே உள்ள பகுதியில் சாலைகள்,நடைபாதைகளில் உள்ள பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், சேரும்,சகதியுமாக காட்சி தந்தது.மதராஷாவிற்கு கல்வி கற்க செல்லக்கூடிய பெண்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் பத்துக்கும் மேற்பட்ட தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணிமன்றத்தினர் சாலை மற்றும் நடைப்பாதைகளில் உள்ள பள்ளங்களுக்கு கல்,மணல்களை பரப்பி தண்ணீர் தேங்காத வண்ணம் நிரப்பி பள்ளங்களை சீரமைத்தனர்.பேரூராட்சி செய்யவேண்டிய பணிகள் என்று பாராமல் தன்னார்வத்துடன் களப்பணியாற்றிய தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினரை தெரு பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இது போன்ற சமூகப்பணிகளில் தங்களையும் இணைத்துக்கொண்டு இளைஞர்கள் களப்பணியாற்றுவது அதிரையில் தொடர்ந்து அதிகரித்துவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...