நாடுமுழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் இன்று வியாழக்கிழமை வயது முதிர்வால் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதனை அறிந்த பேராவூரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு MLA சம்பவ இடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். மேலும் தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து உடல் அடக்கம் செய்யும் வரை உடனிருந்தார்.