Friday, April 19, 2024

துப்புரவுப் பணியாளர் குடும்பங்களுக்கு அதிரை தமுமுக நிவாரண உதவி!! (படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

ஒட்டு மொத்த உலகையே உராய்ந்து கொண்டிருக்கும் சீனாவில் பிறந்த கொரோனா எனும் கொடிய வைரஸ், இத்தாலிக்குப் பின் இந்தியாவில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பவனி வரும் இந்த கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறைகளும் கடுமையாக போராடி வருகிறது.

கொரோனா நிவாரண உதவிகளுக்காக மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என பலரும் தங்களுடைய நிவாரண தொகையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அதிரை நகர தமுமுக சார்பில் அதிரை பேரூராட்சியில் துப்புரவு பணி செய்து வரும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களும், முகக் கவசங்களும் வழங்கப்பட்டது.

இது குறித்து வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் கூறுகையில்,
துப்புரவு செய்வது எங்கள் தொழில் என்பதால் பலர் எங்களை ஏளனமாக பார்த்ததுண்டு. ஆனால் இஸ்லாமிய மக்கள் எங்களை அன்போடும் ஆதரவோடும் எங்களுக்கு எது நடந்தாலும், எந்நேரமாயினும் ஓடோடி வந்து உதவி செய்து வருவது எங்களுக்கு மன மகிழ்ச்சியை தருகிறது. கடந்த வருடம் ஏற்பட்ட கஜா புயலிலும் தமுமுக போன்ற அமைப்புகள் எங்களுக்கு செய்த உதவியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் என்று நாதழுத்த குரலில் கூறினார்.

இந்த கொரோனா நிவாரண பணியில் அதிரை தமுமுக புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...