Thursday, April 18, 2024

இனி அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே வெளியில் வர முடியும்..! தஞ்சை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டு மே 3 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளது. அப்பொழுதும் சிலர் இந்த ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் தேவையின்றி வெளியில் செல்கின்றனர்.

எனவே இனி வரும் நாட்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சாவூர் மாவாட்ட ஆட்சியர் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு அனுமதி அட்டை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அனுமதி அட்டையை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் செல்வோர் கட்டாயமாக இந்த அட்டை எடுத்து செல்லவேண்டும்.

நிபந்தனைகள்.!

இந்த அனுமதி அட்டை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செல்லத்தக்கது. வெளியே வரும்போது முகம் கவசம் அணிய வேண்டும்.!

இந்த அனுமதி அட்டை மூன்று வண்ணங்களில் இருக்கும்.

ஒவ்வொரு வண்ண அட்டையையும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்

பச்சை வண்ண அட்டையை வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஊதா வண்ண அட்டையை வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ரோஸ் வண்ண அட்டை புதன் மற்றும் சனி ஆகிய கிழமைகள் மட்டுமே செல்லும்.!

ஞாயிற்றுக்கிழமை முழு ஊராடங்காக இருக்கும் யாரும் வெளியில் வர முடியாது.

மேற்குறிப்பிட்ட நேரம் மற்றும் நாட்கள் விவசாய பணிகள் மருத்துவ அவசரத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும்

இந்த அட்டையுடன் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்படும்

15 வயதிற்கு மேல் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்தி வெளியே வர அனுமதிக்கப்படுவர்

செல்லுமிடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

இந்த அனுமதி அட்டை உடன் கண்டிப்பாக குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை உடன் எடுத்து வர வேண்டும்

அரசு அலுவலர்கள் ஆய்வின்போது அனைத்து ஆவணங்களையும் தவறாமல் காண்பிக்க வேண்டும்

இந்த அனுமதி அட்டையை தவறாக பயன்படுத்தக் கூடாது மீறினால் அனுமதி அட்டை மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...