கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காலம் முடிவடைந்த பிறகு தேர்வுக்கான மறு தேதி அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.