Friday, March 29, 2024

பொதுமக்களுக்கு அடுத்த இடி : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ. 147 உயர்வு !

Share post:

Date:

- Advertisement -

வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்கி வந்தது.

இந்த நிலையில் மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததும் மானிய விலை திட்டத்தை “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)” என்று புதிய பெயர் சூட்டி, புதிய திட்டம் போல் செயல்படுத்தினார்.

மேலும் ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு இலவசம் என்று கூறினார். ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மானிய விலையில் எல்பிஜி சமையல் எரிவாயு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் வழக்கம்போல் பாஜக அரசு சிலிண்டர் விலையை அடிக்கடி உயர்த்தியது. அதன்படி, மானியமில்லாத சிலிண்டர் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவினம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலையை டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் உயர்த்தப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

சிலிண்டரின் விலையைப் பெறுத்தவரை, சென்னையில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயாகும், மும்பையில் 144.50 ரூபாய் உயர்த்து 858.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 896 ரூபாயாகவும், மும்பையில் 829.05 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து 6-வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெறும் 20 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது அதிகட்சமாக 147 ரூபாய் கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...