திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், போலீசார் பிடித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரையும் பிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய மண்டல ஐஜி வரதராஜு தலைமையில் டிஐஜி லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் முன்னிலையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இவர்களை பிடித்த திருவாரூர் நகர காவல்துறை உதவி ஆய்வாளர் பாரத நேரு, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியம், இளங்கோ தலைமை காவலர்கள் காமராஜ், ரவி, முதல் நிலை காவலர் சுந்தரம் காவலர் ரகுவரன் அடங்கிய காவலர் குழுவினருக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோர் பாராட்டு தெரிவித்து சான்றுகளை வழங்கினர்.