Thursday, March 28, 2024

30 ஆண்டுகளாக நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளின் விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்!! (வீடியோ இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -
கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டீவ் லுட்வின் (51) என்பவர் மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தினை தயாரிப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பாம்பின் விஷத்தை தனது உடலில் செலுத்தி வருகிறார்.

இதற்கு உலகின் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகளின் விஷம் அவருக்கு தேவைப்படுகிறது, பாம்பிடம் இருந்து விஷத்தை எடுத்து, பின்னர் அதனை தனது உடலில் ஏற்றிக்கொள்கிறார்.

போப் புல்விரியன் என்ற வகை பாம்பிடம் விஷம் எடுப்பது போன்றுதான் பிற பாம்புகளிடம் இருந்தும் விஷம் எடுக்கிறார்.

இதுகுறித்து ஸ்டீவ் கூறியதாவது, ஒரு முறை பிரித்தானியாவில் தீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்கள் இருக்க வேண்டியதாயிற்று, நான் சாகப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வீடியோ இணைப்பு:

https://youtu.be/eVdjfN-cXyQ

அல்லது, வீங்கி கறுப்பாகும் என் கையை வெட்டிவிடப்போவதாகவும் மருத்துவர்கள் கூறினர். இவ்வாறு பாம்பு விஷத்தால் பல்வேறு ஆபத்துகளை சந்தித்துள்ளேன். இது மிகவும் ஆபத்தானது என்றாலும் தவறுகளில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டேன்.

இப்போது, என்னிடம் நல்ல தொழிலநுட்பம் உள்ளது. நான் பல ஆண்டுகளாக நோய்வாய்ப்படவில்லை என்பதை கவனிக்கிறேன். எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக சளி அல்லது காய்ச்சலோ வரவில்லை என கூறியுள்ளார்.

மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தினை உருவாக்க விரும்பும் அவருடைய ரத்தத்திலுள்ள நோய் எதிர்ப்பு கூறுகளை கோப்பன்ஹேசன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...