தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பாரம்பரிய விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(3.8.19) காலை 10 மணியளவில் மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் AK.தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பாரம்பரிய விசைப் படகு சங்க செயலாளர் இப்ராகீம்,பாரம்பரிய நாட்டுபடகு சங்க தலைவர் செயது முகமது மற்றும் செயலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மல்லிப்பட்டிணம் துறைமுகம் அமைக்கப்பட்டதற்கு தமிழக அரசிற்கும்,அமைச்சர், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளில் நிவாரணம் கிடைக்காத எட்டு படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிடவும் போன்ற ஏழு தீர்மானங்களை கூட்டத்தில் நிறைவேற்றினர்.