Friday, April 19, 2024

நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி… பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு !

Share post:

Date:

- Advertisement -

2019-2020-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆவது முறையாக வெற்றி பெற்ற பாஜக அரசின் நிதி அமைச்சரான நிர்மலா இன்று முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி தலா ரூ 1 உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் பெறப்படும் தொகை சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ 100 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 2.50, டீசல் லிட்டருக்கு ரூ, 2.30 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தலையில் இடி விழுந்தாற்போல் இந்த விலை உயர்வு உள்ளது.

பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே இன்று சவரனுக்கு ரூ.512 ரூபாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...