Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணம் கிராமசபா கூட்டத்தில் காரசார விவாதம்…!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் உள்ள 12000க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. மே 1 உழைப்பாளர் தினம் அன்று நடத்தப்பட வேண்டிய கூட்டம் தேர்தல் நடைபெற்றதால் தள்ளிவைக்கப்பட்டு இன்று(28.06.2019) நடைபெற்றது.அதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மனோராவில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மூத்த குடிமகன் என்ற அடிப்படையில் வீரையன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சென்ற கிராம சபா கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் குறித்தும்,ஊராட்சியின் பல பகுதியில் உள்ள சுகாதர சீர்கேடுகளை ஆதாரத்துடன் பொதுமக்கள் காண்பித்தனர்,மேலும் குடிநீர் தொட்டிகளில் புழுக்கள் இருப்பதாகவும் உடனடியாக சுத்தம் செய்திடவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.மல்லிப்பட்டிணத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும்,தெரு மின் விளக்குகள், குளங்களை தூர் வாரிட வேண்டும்,சாலை வசதிகள்,ஷாபி இமாம் தெரு,வடக்கு தெரு,பேருந்து நிலையம் செல்ல பெண்கள் பயன்படுத்தும் பழைய பேங்க் சாலை போன்றவற்றில் ஏற்பட்ட சுகாதர சீர்கேடுகள் குறித்தும் காரசார விவாதம் நடைபெற்றது. துறைரீதியாக மனுக்களை அனுப்புவதாக PDO கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.

 

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி சங்கம்,காங்கிரஸ்,SDPI கட்சி,சமுதாய நலமன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்தூகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...