அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நாளை முதல் துவங்க உள்ளது.
கடந்த முறை தங்களது அபார ஆட்டத்தின் மூலம் கால்பந்து ரசிகர்களை கவர்திழுத்து இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தூத்தூர் கன்னியாகுமரி அணியும், போராடி இரண்டாமிடம் பிடித்த கௌதியா 7’s நாகூர் போன்ற தலைசிறந்த கால்பந்து அணிகள் இத் தொடர் போட்டியில் கலந்துக் கொள்ள உள்ளன.
இந்த கால்பந்துத் தொடரில் ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் முதல் ஆட்டமாக மார்க்ஸ் மன்னார்குடி – VVFC மனச்சை அணிகளும்,
இரண்டாம் ஆட்டமாக சம பலம் வாய்ந்த SFT தேனி – கலைவாணர் 7’s கண்டனூர் அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.