அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது மீராஷா வயது (42) இவருக்கு வயிற்று பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
ஆரம்ப நிலை புற்றாக இருந்த காரணத்தினால் முழுவதுமாக நீங்கிய நிலையில் திடீரென கழுத்து பகுதியில் பரவியிருந்தது இதனை அடுத்து மேற்கண்ட மருத்துவமனியிலேயே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்ட இவருக்கு தொடர் சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இன்மையால் மிகவும் சிறமத்திற்கு உள்ளாகி வருகிறார்.
திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும், மனைவியும் உள்ளனர்.
தயாள குணமுள்ள தனவந்தர்களின் உதவியை நாடி இருக்கும் இவருக்கு தாராளமாக நிதியுதவி அளித்து சிகிச்சை தொடர உதவிடுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
குறிப்பு: மருத்துவ சான்றுகளை சரிபார்த்த பின்னரே இதனை பொது வெளியில் பதிவிடப்படுகிறது.