Friday, April 19, 2024

7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரைக்கு வந்த பயணிகள் ரயில்-பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர்-காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தெற்கு ரயில்வே சார்பில் சோதனை ஓட்டமும் கடந்த மாதம் நடத்தப்பட்டது. மேலும் சோதனை அடிப்படையில் சிறப்பு பயணிகள் ரயில் சேவை ஜூன் 1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

அதன்படி பயணிகள் ரயிலானது, இன்று சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் திருவாரூரிலிருந்து காரைக்குடி நோக்கி புறப்பட்டது. வழியில் மாங்குடி, மாவூர் ரோடு, மணலி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக அதிராம்பட்டினத்திற்கு பகல் 12.07 மணியளவில் வந்தது.

அதிரைக்கு வந்த பயணிகள் ரயிலை, ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிரைவாசிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதற்காக பெரியவர்கள் முதல் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் அதிரை ரயில் நிலையத்தில் திரண்டிருந்தனர். இந்த ரயிலானது பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக பிற்பகல் 2.15 மணியளவில் காரைக்குடியை சென்றடையும்.

மேலும் இன்று தொடங்கப்பட்ட பயணிகள் ரயில் சேவையில், நாகை  நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்ட்  உறுப்பினர் எம். செல்வராசு திருத்துறைப்பூண்டி – பட்டுக்கோட்டை வரை ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...