Wednesday, April 24, 2024

அதிரையில் தேவாலயம் சூறை! சிக்கினார் இளங்கோ!

Share post:

Date:

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவல் நிலையம் அருகே உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயம் மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டது. குறிப்பாக சிலைகளும் கண்ணாடிகளும் உடைத்தெறியப்பட்டன. இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில், தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை கண்டுபிடித்து தண்டிக்கும்படி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர். இந்தநிலையில், புனித பாத்திமா அன்னை தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த இளங்கோ என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை குடும்பத்தினரை அழைத்து எச்சரித்த காவல்துறையினர், இளங்கோவினை விடுவித்தனர். மேலும் தேவாலயத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளை இளங்கோவின் குடுபத்தினர் சரி செய்து தரவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...