அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று வியாழக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் RCCC மற்றும் செருவாவிடுதி அணியினர் மோதினர். முதலில் பேட் செய்த செருவாவிடுதி அணியினர், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய RCCC அணியினர், 9.5 ஓவர்களில் 113 ரன்கள் அடித்து வெற்றி பெற்றனர்.
பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் Eleven ஸ்டார் ராம்நாடு அணியினரும் TRPCC காரைக்கால் அணியினரும் மோதினர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராம்நாடு அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். பின்னர் சேஸ் செய்த TRPCC காரைக்கால் அணி, 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர்.
நாளைய(03/05/2019) தினம் இறுதி ஆட்டம் ஆட இருக்கின்ற அணிகள் :
Eleven ஸ்டார் ராம்நாடு vs RCCC
நேரம் : மதியம் 2 மணி