அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 22/04/2019 முதல் அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஐந்தாம் நாள் ஆட்டமாக நேற்று ஒரு ஆட்டம் நடைபெற்றது. இதில் AFCC அணியினரும் தஞ்சாவூர் அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த AFCC அணி 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது. பின்னர் 195 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தஞ்சாவூர் அணியினர் 18 ஒவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் AFCC அணியினர் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.