அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் நான்காம் நாள் ஆட்டமாக இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் TRPCC அணியினரும் , VBCC அதனக்கோட்டை அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த TRPCC காரைக்கால் அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் குவித்தனர். பின்னர் 149 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய VBCC அதனக்கோட்டை அணியினர் 122 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் TRPCC அணியினர் வெற்றி பெற்றனர்.
பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் TRPCC அணியினரும் கும்பகோணம் ஜனா பாய்ஸ் அணியினரும் மோதினர். இதில் டாஸ் வென்ற TRPCC பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதில் TRPCC அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 18 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன்கள் குவித்தனர். பின்னர் 127 என்ற இலக்குடன் களமிங்கிய கும்பகோணம் ஜனா பாய்ஸ் அணியினர் 110 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர்.
நாளைய(26/04/2019) தினம் ஒரு ஆட்டம் மட்டுமே : AFCC மற்றும் தஞ்சாவூர் (South africa)
மதியம் 2:00 மணியளவில் ஆட்டம் நடைபெறும்.
குறிப்பு : அதிரை WCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.