மல்லிப்பட்டிணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மக்தப் மதரஸாவின் ஆண்டு விழா நாளை(24.04.2019) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.இவ்விழாவில் மதராஸாவில் பயிலும் மாணவ,மாணவிகளின் மார்க்க சொற்பொழிவுகளும்,கிராஅத் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது.
மேலும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியும்,இதில் பிள்ளைகள் வளர்ப்பதில் பெற்றோர்களின பங்குகள் குறித்தும்,சமூகத்தில் ஒவ்வொரு பிள்ளைகளின் தேவைகள் குறித்தும் பல்வேறு உரைகள் நிகழ்த்தப்படுகிறது.இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மக்தப் மதரஸா நிர்வாகத்தினர் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.