தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் தஞ்சை தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் SS. பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமை தஞ்சை மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர். கே.எம். காதர் முகைதீன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், சம்பைப்பட்டினம், செந்தலைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.