அதிராம்பட்டினம் கடைத்தெரு கிரானி மளிகை எதிரே உள்ள நெய்னா டீக்கடை உரிமையாளர் ஷேக்தாவுது, வழக்கமாக நேற்று இரவு பணிமுடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கடையை திறக்க வந்த ஷேக்தாவூது கடையின் பூட்டு உடைக்கப் பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ஒரு டிவி,சிலிண்டர்,₹5700 ரொக்க பணம் ஆகியவை திருடு போன சம்பவம் தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறைக்கு பாதிக்கப்பட்ட கடையின் உர்மையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
விரைவில் அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களின் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
அதிரை சுற்றுவாட்டர பகுதிகளில் தொடர்கதையாக உள்ள திருட்டு சம்பவத்தை அடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்
பொதுமக்களின் அச்சத்தை போக்கி நிம்மதிதியாக வாழ காவல்துறை உத்திரவாதம் அளித்திட வேண்டும்.