சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து 609 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சென்னையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையின் டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து காலை 6.15 மணியளவிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலஅதிர்வால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.