தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 150 வருடங்களுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோட்டை சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.