Friday, April 19, 2024

அதிரை மாஜ்தா ஜூவல்லரியில் நூதன திருட்டு,குற்றவாளிகளை பிடிக்குமா காவல்துறை….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் திலகர் தெருவில் உள்ள மாஜ்தா ஜீவல்லரியில் நூதன கொள்ளை.

கடற்கரைத் தெருவை சார்ந்த OKM.சிபகத்துல்லாஹ் பல ஆண்டுகளாக அதிரையில் மாஜ்தா ஜூவல்லரி கடை என்று வைத்து நகை வியாபரம் செய்து வருகிறார்.மேலும் அவர் சில தன்னார்வ அமைப்புகளிலும் செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் வழக்கம்போல் தனது கடையை நேற்று்(ஜனவரி 24) அடைத்துவிட்டு அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார்.இன்று காலையில் எழுந்து வெளியே பார்க்கையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்.மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் ரெக்காட் செய்யும் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றுவிட்டனர்.

சம்பவத்தையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டது.காவல்துறை SP தலைமையிலான குழு கைரேகை மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அதிரையில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

அதிரையில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்த போதும் காவல்துறையினரின் தொடர் அலட்சிய போக்கே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...