Thursday, March 28, 2024

Share post:

Date:

- Advertisement -

ஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டனர். புயலால் மீனவர்களின் படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், ராமர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த தாங்கள் அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலினிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு மீனவர் நலச்சங்க மாநில செயலாளர் A.K. தாஜுதீன், அஹமது கபீர், இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...