வீடு,வாழ்வாதரம்,உடைமை யாவற்றையும் இழந்து பரிதவித்து நிவாரணம் கிடைத்திடாத என்று ஏங்கி நிற்கும் அப்பாவி பொது மக்களிடம்,
கஜா புயல் தாக்கத்தால் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி இருக்கும் மல்லிப்பட்டிணம் மக்களிடத்தில் சென்ற மாதம் கட்டிய அதே மின்கட்டணத்தை திரும்ப செலுத்துங்கள் என்ற மின்வாரியத்தின் உத்தரவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்றதாகும்.
கஜா புயலின் கோரதாண்டவத்தால் வாழ வழியின்றி இருக்கும் மக்களிடத்தில் மின்சார கட்டணம் கட்ட சொல்வது, உடனே செத்துவிடுங்கள் என்பதை போன்ற உள்ளது. மல்லிப்பட்டிணம் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிடும் வரைக்கும்,உரிய அரசு நிவாரணம் கிடைக்கும் வரை தமிழக அரசு அடுத்த ஆறு மாதத்திற்கு மின் கட்டணத்தை அனைத்து மின் இணைப்புகளுக்கும் ரத்து செய்திட வேண்டும் என்றும், மேலும் தற்சமயம் மின்வாரியத்தின் அழுத்தத்தை உடனே திரும்ப பெற்றிட வேண்டும் என்று தமிழக அரசிற்கு SDPI கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
அப்துல் பஹத்
மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர்
SDPI கட்சி.
,