தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் தொடங்கி இராமநாதபுரம் வரை, இரவில் நூற்றுக்கணக்கான மாடுகள் கிழக்கு கடற்கரை சாலையில் அலைந்து திரிந்து வருகின்றன.
இதனால் நிறைய சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே உயிரிழப்புகளை தடுக்கவும், பாதுகாப்பான, கோடிக்கணக்கில் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலை மக்கள் உபயோகத்திற்கு முழுதும் பயன்படும் வகையிலும் சாலைகளில் கால்நடைகள் அலைவதை தடுக்க தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை மனுவை அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்ப உள்ளோம்.
கால்நடைகள் பிரச்சினை குறித்து வேறு எந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டுகிறோம். அனைத்து அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கும் இந்த பதிவை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
வ. விவேகானந்தம், தலைவர், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4,
செயலாளர், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம்.
தொடர்புக்கு:- +91 9442 318 881