தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தடுக்க அரசின் சார்பிலும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்துக்கு அடுத்த செந்தலைப்பட்டினத்தில் இன்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு இன்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் மற்றும் அழகிய நாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து செந்தலைப்பட்டினத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தினர். இன்று வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற இம்முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.