Thursday, March 28, 2024

தஞ்சை ஆசிரியை கழுத்தறுத்து கொலை!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (24). கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்றுமாலை கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் மர்மமான முறையில் கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வசந்தபிரியாவுக்கும் வலங்கைமானைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28 ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் சம்மந்தமே இல்லாமல் காவிரி ஆற்றின் கரையில் கத்தியால் கழுத்து அறுத்துக்கிடந்தார். ஒரு இளைஞருடன் பைக்கில் சென்றிருப்பதை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் யார், அங்கு யாரால் கொலை செய்யப்பட்டார் எனவும் விசாரித்து வருகின்றோம் என்றனர்.

கொலை செய்யப்பட்ட இடத்தில் இரண்டு செல்போன்கள், பேனாகத்தி ஆகியவைக்கிடந்ததை திருவிடைமருதூர் போலீஸார் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று புதுக்கோட்டை இளம் பெண் மர்மமான முறையில் மல்லிப்பட்டினம் பகுதியில் கொலைசெய்யப்பட்டு சாக்குமூட்டையில் கிடந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் கும்பகோணத்தில் ஆசிரியை கொலையாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...