Friday, April 19, 2024

பட்டுக்கோட்டையில் குளத்தில் மூழ்கிய மூதாட்டியை காப்பாற்றிய தொண்டு அமைப்பினர் !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டையில் குளத்தில் மயங்கி விழுந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்து குளத்தில் விழுந்தார். அவருடைய பெயர் செல்லக்கண்ணு(வயது 68). குளத்தில் மயங்கி விழுந்த அவர் சுமார் அரைமணி நேரம் குளத்திலேயே மிதந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு இருந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விதைகள் அமைப்பினரும், கலாம் நண்பர்கள் இயக்கத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உடனே அவர்கள் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு துறையினரின் ஒத்துழைப்புடன் அந்த மூதாட்டியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அம்மூதாட்டி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிர் காக்கும் சேவையில் விரைந்து செயல்பட்டு மூதாட்டி ஒருவரின் உயிரை காப்பாற்றிய விதைகள் அமைப்பினரையும், கலாம் நண்பர்கள் இயக்கத்தினரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...