தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் இன்று (30.10.2018) வினியோகம் செய்யப்பட்டது.
டெங்கு,பன்றிக் காய்ச்சல்,வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் தமிழகத்தில் பரவி வரும் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் SDPI கட்சியினர் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.
அதன்தொடர்ச்சியாக மல்லிப்பட்டிணத்தில் ராமர்கோவில் தெரு,பள்ளிவாசல்,காசிம் அப்பா தெரு,கேஆர் காலணி,புதுமனைத் தெரு,காயிதே மில்லத் நகர் உள்ளிட்ட பத்து இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.இதில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை குடித்தனர்.சில தெருக்களில் வீடுகளுக்கும் நேரடியாக சென்று வினியோகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.