தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்.
பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து தேசம் முழுவதும் காங்கிரஸ் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அரசியல் கட்சிகள்,அமைப்புகள்,வணிகர் சங்கங்கள்,ஆட்டோ சங்கங்கள் என பல தரப்பிலிருந்தும் ஆதரவு அளித்திருக்கின்றனர்.
அதனை தொடர்ந்து மல்லிப்பட்டினத்தில் முழு அடைப்பிற்கு அனைத்து கட்சிகள் மற்றும் மீனவ சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது.இந்நிலையில் மல்லிப்பட்டினம் கடைவீதிகள்,ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள கடைகள் அடைத்து முழு ஆதரவையும்,மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.