தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில தலைவராக பதவி வகித்த ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி ததஜ நிர்வாகத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனால் ததஜவில் இருக்கும் உறுப்பினர்கள் மத்தியில் பலத்தரப்பட்ட அதிர்ச்சிகளும் குழப்பங்களும், நிர்வாகத்தில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்களும் செய்யப்பட்டது.
ததஜ கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அல்தாஃபி மக்கள் மத்தியில் விளக்கமளித்து வந்தார். இதன் பின்னர் தொடர்ந்து தாவா பணியையும், சமூதாய பணிகளையும், அல்தாஃபி தொய்வின்றி தனது முகநூல் பக்கத்தில் நேரலையாகவும் பதிவாகவும் பதிந்து வந்தார்.
இதனையடுத்து ததஜ நிர்வாகத்தின் மேல் அதிருப்தியில் இருக்கும் உறுப்பினர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வந்தனர்.
தனித்தனியாக பிரிந்து கிடக்கும் உறுப்பினர்களை ஒன்றினைத்து செல்வதற்காக, அல்தாஃபி தலைமையில் இன்று திருச்சி SS மஹாலில் புதிய பாதையில் இலட்சிய பயணம் என்ற முழக்கத்தோடு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் என்கிற பெயரில் புதியதாக ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்டது.
முன்னதாக இந் நிகழ்வில் அல்தாஃபி, முஹம்மது யூசுப் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் மாநில தலைவராக குமரி மாவட்டம் ஹாஜா நூஹ்,
துணைத்தலைவர் சேப்பாக்கம் அப்துல்லாஹ்,
பொதுச் செயலாளர் சென்னை சுல்தான்,
துனைப் பொதுச் செயலாளர் குமரி மாவட்டம் அப்துல் ஜலீல், பொருளாளர் அப்துல் மாலிக் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்திற்கு சிவப்பு, வெள்ளை வண்ணத்தில் முஹம்மது யூசுப் கொடியை அறிமுகம் செய்தார்.
கடந்த காலத்தில் நிகழ்ந்த சில குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் இந் நிகழ்வில் கூடியிருந்த உறுப்பினர்கள் கேள்விகளை கேட்டு அதற்கு உரிய பதில் தீர்வையும் பெற்றனர்.
இக் கூட்டத்திற்கு சுமார் 1400 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.