இம்மாதம் 22ஆம் திகதி இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நபி இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஹஜ்ஜு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடபட்டன.
நபி இப்ராஹிம் அவர்களின் புதல்வரை அறுத்து பலியிட இரைவனின் கட்டளையை ஏற்று அதற்க்கு முனைந்த அவரின் தியாகத்தை எண்ணி மகனுக்கு பதிலாக ஒரு பிராணியை இறக்கி அதனை அருக்க உத்தரவிட்டதின் நினைவாக உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் அந்நாளில் ஆடு மாடு ஒட்டகைகளை அருத்து ஏழைகள்,உற்றார்கள் என பகிர்ந்துண்டு மகிழ்வர்.
அவ்வகையில் அதிராம்பட்டினம் நகரில் அருக்கப்பட்ட பிராணிகளின் மாமிசங்களை உறவினர்கள், ஏழைகளுக்கு வழங்கியுள்ளனர்.
அதனை பெற்றுகொண்ட யாரோ ஒருவர் நடுதெரு ஊராட்சி ஒன்ரிய நடுநிலை பள்ளியருகே சாலையில் வீசி சென்றுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், இந்த மாபாதக செயலை செய்தவர் இறைவனிடம் இதர்க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என மனம்.புழுங்கி கடக்கின்றனர்.