தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் கடும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
அதிரையில் இன்று மாலை முதல் ஆரம்பித்த தூறல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதால் மின்சார தடையும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
இன்று இரவு சரியாக 10.50 மணியளவில் அதிரை பேரூந்து நிலையத்தில் ஆவின் பாலகம் அருகே உள்ள டிராஸ்பார்மரில் உள்ள மின் கம்பி தீடிரென பயங்கர சப்தத்துடன் அறுத்து விழுந்தது.
இருப்பினும் முறையான பராமரிப்பிலாத காரணத்தால் இது போன்ற ஆபத்தான சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டிரான்ஸ்ஃபார்மர் கம்பி அறுந்து விழுந்ததால் அதிரை திலகர் தெரு உள்ளிட்ட தெருக்கள் இருளில் மூழ்கியுள்ளது.