தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக விருது வழங்கி பாராட்டு விழா நேற்று (12/08/2018) லட்சுமி திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
இந்த விழாவில் கலாம் நண்பர்கள் இயக்கம் மாநில செயலாளர் திரு. சரத் ராபின்சன் தலைமை வகித்தார், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. M.பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திரு.V. P. இளையபாரி(சமூக செயல்பட்டாளர்) மற்றும் திரு.இயற்கை சின்னையா நடேசன் (இயற்கை ஆர்வலர்), திரு Dr S.மாரிமுத்து, திரு C.ராமகிருஷ்ணன், திரு அன்பழகன், திரு கெளதமன்,திரு D.r.சதாசிவம் கலந்துகொண்டனர்.
இதில் கடந்த ஆண்டு சமூக பணிகளில் சிறப்பாக பணியாற்றிய நல் உள்ளங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இறுதியாக திரு I. M. ராஜா அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.