Friday, April 19, 2024

கலைஞருக்கு கடிதம் எழுதிய பேத்தி!!

Share post:

Date:

- Advertisement -

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக நோய் தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து திமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ‘தலைவா நீ எழுந்து வா, மீண்டு வா தலைவா’ என கண்ணீர் மல்க கோஷம் எழுப்பிய படி மருத்துவமனை வெளியே தனது தலைவரை காண காத்திருந்தனர்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி மிராக்லின், திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த கடிதம் டாக்டர் மு.கருணாநிதி தாத்தாவுக்காக நான் எழுதுகிறேன்.,

“எனக்கு கருணாநிதி தாத்தா ரொம்ப பிடிக்கும். அவர் மேல எனக்கு அன்பு ரொம்ப அதிகம். எப்பொழுது நீங்கள் நோய்வாய்ப்பட்டீர்களோ, அப்ப நான் அழுதேன். உங்களுக்காக நான் இரவு மற்றும் காலையில் பிராத்தனை பண்ணினேன். நேற்று எனது தாய், என்னிடம் கூறினார், நீங்கள் தற்போது நலமாக இருக்கிறீர்கள் என்று, அதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்தது. இன்று நான் பள்ளிகூடத்திற்கு சந்தோசமாகவும் சென்றேன்” என எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை திமு கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...