அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு இத்தொடரில் விளையாடி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தூத்தூர் கன்னியாகுமரி – சிவகங்கை அணிகள் மோதின.
இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் இரு அணியினரும் கோல் அடிப்பதற்கான முயற்ச்சிகளில் தீவிரம் காட்டினாலும் தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் பகுதி நேர ஆட்டத்தில் தனது முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் கோல் அடிப்பதற்காக பல வியூகங்களை சிவகங்கை அணி வகுத்தாலும் அது சிவகங்கை வீரர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது.
இறுதியாக தூத்தூர் கன்னியாகுமரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நில்லாமல் ஓடிய கங்கையின் வெற்றியை தடுத்து நிறுத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நாளைய தினம் இரண்டாவது அரையிறுதியில் நாகூர் – காயல்பட்டினம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.