அதிரை ஃபிரண்டஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி இன்று துவங்கியது.
இன்றைய முதல் நாள் போட்டியில் வேலங்குடி அணியும், மதுரை அணியும் மோதியது.
முன்னதாக, சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் M.K.சிவானந்தம், தமாக செயலாளர் வேலுச்சாமி மற்றும் இதர (AFFA) அணி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் ஆட்டம் சிறப்பு விருந்தினர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
ஆட்டம் துவங்கிய நிமிடங்களிளையே வேலங்குடி அணி ஆதிக்கம் செலுத்த அதனை இறுதி வரை தக்கவைத்து கொண்டது வேலங்குடி அணி.
ஆட்டத்தின் அரை நேரப்பகுதிக்குப் பின்னர் எதிரணியின் ஆட்ட நுனுக்கத்தை எதற்கும் சலைக்காமல் அபாரமாக ஆடிய வேலங்குடி அணி ஆட்ட இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை முத்திரை பதித்தது.
நாளைய தினம் காயல்பட்டினம் – ஜாலி பாய்ஸ் கோயம்புத்தூர் அணிகள் மோத உள்ளனர்.
சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் நாளை பலப்பரீட்ச்சை நடத்த உள்ளதால் நமதூர் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.