அதிராம்பட்டினம் பேரூரில் சுமார் 75 முதல் 80ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் முறையாக பேரூராட்சி விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே அதிரை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடி நீர் வினியோகம் செய்ய பேரூராட்சியில் போதுமான ஆழ்துளை கிணறுகள் இருந்தும் நிலத்தடி நீர் குறைவாக உள்ளதால் நீரேற்றம் செய்வதில் கால தாமதம் மற்றும் பற்றாக்குறை நிகழ்கிறது.
இதனால் அத்தியாவசிய குடிநீர் தேவைக்கு தனியார் நிறுவன நீர்களை வாங்கி பருகும் அவல நிலைக்கு அதிரை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மறுபுறம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பெறப்பட்ட நீரும் அங்குள்ள நீர் இருப்பு காரணமாக குறையத ்தொடங்கியதை அடுத்து இனி வரும் காலங்களில் குடிநீர் தேவை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே பொதுமக்களாகி நாம் செய்ய வேண்டியது என்ன?
குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீரை உபயோகம் செய்யவும்.
இதர தேவைகளை வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமே நிவர்த்தி செய்து மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுகிறோம்.
மேலும் வீட்டில் உள்ள கழுநீர் வீட்டிலேயே பள்ளம் அமைத்து மறு சுழற்சிக்கு வாய்ப்பு அளிப்புபோம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் நீர்தட்டுபாடின்றி நிம்மதியாகவும் வாழலாம்.