Thursday, March 28, 2024

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்-ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு!!

Share post:

Date:

- Advertisement -

 

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் என்ற இரு பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில்j கைது செய்யப்பட்ட திமுகவினரை விடுவிக்கக் கோரி நேற்று திமுகவினர் போராட்டம் நடத்தினர். முன்னதாக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்றுமுன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு கொடி காட்டிய திமுகவை சேர்ந்த 293 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று திமுக சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை கோர்ட் அருகில் காலை 8 மணி முதல் குவிய தொடங்கினர். காலை 10.10 மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் போராட்டம் நடக்கும் பகுதிக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...