ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் ஜான்னி பேர்ஸ்டோவ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சதமடித்தனர்.
ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 444 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியே அந்த சாதனையை முறியடித்துள்ளது.