Thursday, March 28, 2024

அதிரையில் குடிநீர் வர உத்தரவாதம் தரப்பட்டதால் போராட்டம் ரத்து..!

Share post:

Date:

- Advertisement -

 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பாக ரமளான் மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர் என தன்னார்வலர்கள் குற்றச்சாட்டினர்.

இதனை முன்னெடுத்து தன்னார்வலர்கள் அதிரை பேரூராட்சிக்கு உட்பட அனைத்து வார்டுகளுக்கு சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தன்னார்வலர்கள் புகார் அளித்துள்ளார்கள்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 7 முதல் 12 வரையிலான பகுதிகளில் குடிநீர் சில நாட்களாக வரவில்லை என்று ஆத்திரமடைந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து அதிரை நகர பேரூராட்சி அதிகாரியான வி.ஏ.ஓ பொதுமக்கள்,தன்னார்வளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இன்று மாலை 5 மணிக்கு தண்ணிர் சரியான முறையில் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூறியப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...