வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா நிறுவனம் இணைவதற்கு ஐடியாவின் உயர்மட்டக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்கு பிறகு மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா நிறுவனம் இணைவது குறித்து, கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த மாத இறுதியில் இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் இரு நிறுவனமும் முழுமையாக இணைக்கப்பட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதன் வணிகம் விரிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இணைப்பில் வோடபோன் நிறுவனம் 45 சதவிகிதமும், ஐடியா ப்ரோமோட்டர்ஸ்களுக்கு 26 சதவிகிதமும் பங்குகள் பிரிக்கப்படும்..