தஞ்சை மாவட்டம் அதிரையில் இருசக்கரவாகணம் நேருக்கு நேர் மோதி விபத்து..!
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (25.05.2018) இரவு 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இதில் முத்துப்பேட்டையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலரிந்து வந்த தமுமுக அவசர ஊர்தியில் மணி என்பவரை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சிகிச்சை அளிக்க போதிய கருவிகள் இல்லாததால் முதலுதவி செய்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலரிந்து விரைந்து வந்த அதிரை தமுமுக_வின் இளைஞர்கள் கனி,ஆதில்,அசார்,செக் நைனா ஆகியோர் பெரும் அசம்பாவிதங்களை தவிர்த்து முழுமையான உதவி அனைத்தையும் செய்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.
தற்பொழுது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மணி என்பவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.