Friday, March 29, 2024

மல்லிப்பட்டினம் கடற்கரைக்கு அனுமதியில்லை பேனரால் பரபரப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் கடற்கரையில் வைக்கப்பட்ட பேனர் பலரையும் ஆச்சரியத்தையும்,பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்திலே மீன்பிடி தொழிலில் பிரசிதிப்பெற்ற ஊர் மல்லிப்பட்டினம். அப்படியிருக்கையில் இங்கு துறைமுகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான பணிகள் படுவேகமாக நடந்துவருகின்றன.அந்தவகையில் உள்ளே யாரும் அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு பலகை மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறைமுகம் அமைப்பதால் மீனவ மக்களின் முன்னேறும் என்றே எதிர்ப்பார்த்தனர்.ஆனால் நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணமாக துறைமுகம் சார்ந்த அரசின் அதிரடி அறிவிப்பால் மீனவர்கள் திக்குமுக்காடி போய் உள்ளன மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்.

மல்லிப்பட்டினம் துறைமுகம் கட்டுமானம் பற்றியான பல்வேறு கேள்விகளும் குழப்பங்களும் தொடர்ந்து நீடித்த வண்ணமே இருக்கின்றன.அதற்கான சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டிய அரசோ,அதிகாரிகளோ கொடுத்திடவில்லை.

இந்த திட்டம் மீனவ மக்களை நசுக்க காத்திருக்கும் சாகர் மாலா திட்டத்தின் கீழ் வருமா? இந்த திட்டத்தால் குடியிருப்புகள் காலி செய்யப்படுமா? என்ற கேள்விகளுடன் காத்திருக்கின்றனர்.

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களும் அந்த மக்களுடன் இணைந்து அவர்களுக்கான குரலை வலுப்படுத்த வேண்டும் என்பது அம்மக்களின் எதிர்ப்பார்ப்பு….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...