Friday, March 29, 2024

அதிரையில் நாம் மனிதர் கட்சி சார்பில் இலவச ஸஹர் உணவு.,முன்பதிவு செய்ய அழைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

உலகம் முழுவதும் இன்னும் ஓரிரு தினங்களில் ராமலனுடைய நோன்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நோன்பு நேரங்களில் இஸ்லாமியர்கள் பொதுவாகவே அதிகாலை சுமார் 3:30மணிமுதல் ஸஹர் உணவு(நோன்பு வைப்பதற்கு முன் உண்ணும் உணவு) சாப்பிடுவார்கள்.

இதே போல் தமிழகத்தில் முழுவதும் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் ஏராளம்.

இந்நிலையில், பல இஸ்லாமியர்கள் வெளியூர்களில் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஸஹர் உணவு ஏற்பாடுகளை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய இயக்கங்களும் செய்து வருகிறது.

இதேபோல்,தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நாம் மனிதர் கட்சி சார்பில் நோன்பின் ஆராம்பம் முதல் இறுதி வரை இலவசமாக உணவு வழங்கும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதற்க்கு முன்னர் அதிரை தக்வா பள்ளிவாசலில் இலவச உணவு வழங்கும் நிலையில் இரண்டாவதாக ஸஹர் உணவு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியின் அறிவிப்பு:-

புனித நோன்பு ஆரம்பம் முதல் இறுதி வரை இலவசமாக ஸஹர் உணவுகள் வழங்கப்படஉள்ளதாகவும், ஸஹர் உணவுக்கான பதிவு டோக்கன்களை பெற்று உணவு அருந்திக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளனர்.
ஸஹர் உணவு ரமலான் மாதம் முழுவதும் 2:30மணிமுதல் 04:00மணிக்குள் வருகை தந்த அருந்திக்கொள்ளவும் அறிவித்துள்ளனர்.

டோக்கன் வழங்கப்படும் இடம்:- ஹயாத் ரெஸ்டாரண்ட்,NKS சவுண்ட் சர்வீஸ் அருகில், SBI பேங்க் அருகே, அதிராம்பட்டினம்.
செல்:-9952132598

ஸஹர் உணவு வழங்கப்படும் இடம்:- நாம் மனிதர் கட்சி அலுவலகம், மெயின் ரோடு, பேருந்து நிலையம், அதிராம்பட்டினம்.
தொடர்புக்கு:-9786747606,7550345564,7402507622

குறிப்பு:-

ஜாதி, மத, மொழி வெறி இல்லாமல்
ஆதமின் மக்களான மனித குலத்தில்
தேவையுடையோருக்கு தாண, தர்மம் செய்ய நினைப்போர் மட்டும் நாம் மனிதர் கட்சி அலுவலகம் அணுகி
பொருள் உதவி செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...